மகிந்த அணியினர் மீது விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை
கிருலப்பனையில் கூட்டு எதிரணி நடத்திய மேநாள் பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய மேநாள் பேரணியைப் புறக்கணித்து, கிருலப்பனை கூட்டத்துக்குச் சென்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக தீர்மானிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு விரைவில் கூடும் என்றும் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கிருலப்பனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.