புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பிரபாவும் கைது
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட, முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளரான பிரபா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கலைநேசன் இன்று காலை ஏறாவூரில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சத்தொடுவாயில் உள்ள வீட்டில் வைத்து பிரபாவை, தீவிரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்ததாக அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.
46 வயதான பிரபா, இறுதிக்கட்டப் போரின் பின்னர், காணாமற்போயிருந்தார்.
பின்னர், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்பில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.