சாவகச்சேரி வெடிபொருள் மீட்பின் எதிராலி – சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது
சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.
சிறிலங்கா காவல்துறையின் புதிய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட வாய்மூல அறிக்கைகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு தொடர்பாக, எழுத்துமூல அறிக்கைகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.