மேலும்

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்

mahinda-psdசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு இன்று பிற்பகலுடன் முற்றாகவே நீக்கப்படவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள 102 பேரில், 50 இராணுவத்தினர் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறப்பு அதிரடிப்படையினர் பொறுப்பேற்கவுள்ளனர்.

5 மேஜர் தர அதிகாரிகள் மற்றும் 45 கொமாண்டோக்களுக்குப் பதிலாக, 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 46 கொன்ஸ்டபிள்களைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

102 பேர் கொண்ட மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில்,  50 பேர் மட்டும் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், ஏனையவர்கள் நிர்வாக மற்றும் ஏனைய பணிகளிலேயே ஈடுபடுவதாகவும், அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *