போர்த்தளபாடங்களை வாங்க ரஸ்யாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் கேட்கிறது சிறிலங்கா
ஆயுதப்படைகளுக்கான போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு, ரஸ்யாவிடம், 400 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்கா கோரியுள்ளது.
மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகளுக்கும், ரஸ்ய அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது நடந்து வரும் பேச்சுக்களின் போது, இதற்கான இணக்கப்பாடு காணப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் முப்படைகள் மற்றும் காவல்துறைக்குத் தேவையான போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கே, 300 தொடக்கம் 400 மில்லியன் கடனுதவியை ரஸ்யாவிடம் சிறிலங்கா கோரியுள்ளது.
போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்படவுள்ளது.