மேலும்

ரணிலுக்கு இந்தியா அழைப்பு – அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறார்

ranilபுதுடெல்லியின் அழைப்பின் பேரில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாத இறுதியில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்துக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை அடுத்தே, அவரைப் புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் புதுடெல்லியில் தங்கியிருக்கும், ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவிருக்கிறார்.

சிறிலங்கா பிரதமருடன், அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், புதுடெல்லிக்குச் செல்லவுள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டமை, ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய சீனப் பயணத்தின் போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள், என்பன குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது.

இதுகுறித்த விபரங்களை அறிந்து கொள்வதில் இந்தியா ஆர்வத்துடன் இருப்பதாகவும், இந்த விடயங்களை நிறைவேற்றுவது தொடர்பான சிறிலங்காவுக்குத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடிப்படையாக கொண்டே, சிறிலங்கா பிரதமருக்கு புதுடெல்லி அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *