சிறிலங்கா காவல்துறையின் பெயரை மாற்றினார் புதிய காவல்துறை மா அதிபர்
சிறிலங்கா காவல்துறை திணைக்களம் இனிமேல், சிறிலங்கா காவல்துறை (Sri Lanka police) என்று அழைக்கப்படும், என்று சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர் இன்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் பணிகளைப் பொறுப்பேற்றதும், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று தொடக்கம் சிறிலங்கா காவல்துறை என்று மட்டும் அழைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.