மகிந்தவின் பணியகம் அருகே நடமாடிய மர்ம நபர் கைது
அண்மையில் பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பணியகம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல, ஜெயந்திபுர, நெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பணியகம் அருகே சந்தேகப்படும் வகையில் நடமாடிக் கொண்டிருந்தார் என்று கூறி, மகிந்த ராஜபக்சவின் பாதுகாவலர்களால், இவர் பிடிக்கப்பட்டார்.
அத்துருகிரியவைச் சேர்ந்த இடந்த சந்தேகநபர், மகிந்த ராஜபக்சவின் பாதுகாவலர்களால் தலங்கம காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் அடையாள அட்டை இல்லை என்பதற்காகவே மகிந்த ராஜபக்சவின் பாதுகாவலர்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அவரை நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.