சிறிலங்கா விமானப்படைக்கு நாமல் செலுத்திய 50 மில்லியன் ரூபா குறித்து விசாரணை
உள்நாட்டுப் பயணங்களுக்கு விமானங்களைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாக, 50 மில்லியன் ரூபாவை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா சிறிலங்கா விமானப்படைக்குச் செலுத்தியது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
பாரிய நிதிமோசடிகள், மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகளிலேயே, நாமல் ராஜபக்ச செலுத்த 50 மில்லியன் ரூபா விமானக்கட்டணம் செலுத்தியது பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளன.
முன்னைய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்காக விமானப்படை விமானங்களை அவர் வாடகைக்கு அமர்த்தியதற்காகவே இந்தக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன.
சுமார் 150 உள்நாட்டுப் பயணங்களுக்கு நாமல் ராஜபக்ச விமானங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்தளவு பாரிய தொகையை நாமல் ராஜபக்ச எவ்வாறு விமானப்படைக்குச் செலுத்தினார் என்று, அதிபர் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது,