மேலும்

ரணிலின் சீனப் பயண ஏற்பாடுகளைக் கவனிக்க சிறிலங்கா அதிகாரி பீஜிங் விரைவு

Srilanka-chinaசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரபூர்வ பயணம் தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் பிஜிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது பல்வேறு முக்கிய உடன்பாடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காப் பிரதமரின் இந்தப் பயணத்தை, இரண்டு நாடுகளும் முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கும் நிலையில், பயண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரி வெளிவிவகார அமைச்சில் பதவியேற்க முன்னதாக சீனாவில் தூதுவராகப் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *