மேலும்

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விசாரணைக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவு

maithriஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களின் பொது, அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆறு அமைச்சர்கள் தொடர்பாகவே விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிபர் செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட இந்த அமைச்சர்கள், தமது பயண நோக்கத்தை மறந்து விட்டு, களியாட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே, சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கப் பணத்தில் வெளிநாடு செல்லும் அமைச்சர்களுக்கு விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும், சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *