மேலும்

நாமலுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது நீதிமன்றம்

namal-yoshitha (1)நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குமாறு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று குற்றம்சாட்டப்படும், Gowers Corporate Services (Pvt) Limited என்ற நிறுவனத்தின், நான்கு நிரந்தர வைப்புக் கணக்குகளையே, கறுப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் முடக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் நாமல் ராஜபக்ச தவிர்ந்த ஏனையோரை நாட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *