எட்கா உடன்பாட்டு வரைவு புதுடெல்லியிடம் கையளிப்பு
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான சிறிலங்காவின் வரைவு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்ட அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்த வரைவில் இந்தியாவின் உள்ளடக்கங்களை தாம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வரைவின் பிரதிகள் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுடன் உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.