மேலும்

குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்

navaratnarajahயாழ்.குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.நவரட்ணராஜா (வயது62) இன்று அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் மாரடைப்பினால் மரணமானார்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு, நேற்று காலில் திடீர் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று அவருக்கு சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு, மரணமானார்.

மல்லாகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் என.நவரட்ணராஜா, கிராம அலுவலராகப் பணியாற்றிய போது, சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார்.

navaratnarajah

கிராம அலுவலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஊடகப் பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்.

இவர் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து வெளியாகும் பல்வேறு நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

போர் நெருக்கடிமிக்க காலங்களில், துணிச்சலுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டவர்.

இவர் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம்மிக்க ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *