மேலும்

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம்

UN Special Rapporteursஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் மொனிகா பின்ரோவும்,  சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, இரக்கமற்ற மற்றும் இழிவுபடுத்தும் செயல் அல்லது தண்டனை குறித்த சிறப்பு அறிக்கையாளர் ஜுவன் மென்டிஸ் ஆகியோரே வரும் ஏப்ரலில் சிறிலங்கா வரவுள்ளனர்.

இவர்கள், ஏப்ரல் 29ஆம் நாளுக்கும், மே 7ஆம் நாளுக்கும் இடையில் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களின் பயணத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *