நாமல், பசிலுடன் நானும் விரைவில் கைது – என்கிறார் மகிந்த
தனது மற்றொரு மகன் நாமல், சகோதரர் பசில் ஆகியோருடன் தானும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
கண்டியில் தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடு செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச-
“நானும் கூட விரைவில் கைது செய்யப்படவுள்ளேன். என்னுடன், மகன் நால் ராஜபக்ச, சகோதரர் பசில் ராஜபக்ச, விமல் வீரவன்ச, குமார வெல்கம, ரோகித அபேகுணவர்த்தன ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பலரும் என்னை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சித்தாலும், கூட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை.
புதிய அரசியல் கட்சியைத் உருவாக்குவது மக்களின் முன்னுரிமையாக இருந்தாலும், நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.