மேலும்

ராஜித சேனாரத்னவின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து சிங்கப்பூரில் சிகிச்சை

rajitha senaratneசிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்றுக்காலை சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து. ராஜித சேனாரத்னவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமைகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *