மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து பாதுகாத்தேன் – என்கிறார் சிறிலங்கா அதிபர்
மகிந்த ராஜபக்சவை மிக்சார நாற்காலியில் இருந்து தாமே பாதுகாத்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
பொலன்னறுவ மாவட்டத்தில் உள்ள வெலிக்கந்தையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராகத் தெரிவாகியிருந்தால், போர்க்குற்றங்களுக்காக மின்சார நாற்காலிக்கு அனுப்பப்பட்டிருப்பார்.
ஆனால், எமது அரசாங்கம் தான், அவரை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.