மேலும்

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள், முப்படைத் தளபதிகளை சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

zeid-sl-defence-staffsசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி வரவேற்றார்.

zeid-sl-defence-staffs

அதையடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

இந்தச் சந்திப்பில், சிறிலங்கா இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள், கூட்டுப்படைகளின் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *