மேலும்

இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் தொடங்கியது

india-sl-joint commission (1)ஒன்பதாவது. இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் இன்று பிற்பகல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் இந்தியத் தரப்பில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

india-sl-joint commission (1)

india-sl-joint commission (2)india-sl-joint commission (3)

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *