இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவை வந்தடைந்தார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று மதியம், சிறிலங்காவை வந்தடைந்தார்.
ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், தனி விமானத்தில் கொழும்பு வந்தனர்.
சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ் ஜெய்சங்கர், மற்றும் மூத்த அதிகாரிகளும், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.