மேலும்

சிறைச்சாலை உணவைச் சாப்பிட மறுக்கும் யோசித ராஜபக்ச

Welikada_Prisonநிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உண்ண மறுப்பதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

”கடந்த சனிக்கிழமை இரவு முதல் வெலிக்கடை விளக்கமறியல்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச உள்ளிட்ட நால்வரும், முதலில் சிறைச்சாலை உணவை சாப்பிடுவதாக தெரிவித்திருந்தனர்.

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர்கள் சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை ஏற்றுக் கொண்டனர்.

நேற்றுக்காலை முதல், அவர்கள் சிறைச்சாலை உணவைச் சாப்பிடவில்லை. அதற்குப் பதிலாக மூன்று வேளையும், வீட்டில் இருந்து அவர்களுக்கு உணவு எடுத்து வரப்படுகிறது.

விக்கமறியலில் உள்ள கைதிகள் அனைவருக்கும், மூன்று வேளை உணவையும் வீட்டில் இருந்து வழங்க முடியும்.

அந்த வசதியே யோசித ராஜபக்சவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *