மேலும்

இரு அமைச்சர்கள் பதவியேற்பு

d.m.swaminathan-msசிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்த திலக் மாரப்பன, அவன் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் எந்த சர்ச்சைகளால் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார்.

இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

d.m.swaminathan-mssagala-ratnayake-ms

சாலக ரத்நாயக்க ஏற்கனவே தென்மாகாண அபிவிருத்தி அமைச்சராகவும், டி.எம்.சுவாமிநாதன், புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *