மேலும்

விசாரணை அறிக்கை தொடர்பாக ஊடக மாநாட்டை நடத்துகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Zeid-Raad-al-Husseinசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கை வரும் புதன்கிழமை வெளியிடவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதுபற்றிய ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

நாளை மறுநாள், புதன்கிழமை – மத்திய ஐரோப்பிய நேரம் காலை 10.30 மணியளவில், சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

அத்துடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் இணையத்தளத்திலுவும் அது வெளியிடப்படும்.

இந்த அறிக்கையின் கண்டறிவுகள் தொடர்பாக, அந்த ஊடகவியலாளர் மாநாட்டில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிப்பார்.

தமது பரிந்துரைகள் தொடர்பாகவும், அவர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *