சிறிலங்காவுடன் இணைந்து தீர்மானம் கொண்டு வருவோம்- அமெரிக்கா அறிவிப்பு
சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் குறித்த செயல்முறைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து, அதன் இணக்கப்பாட்டுடனும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆதரவுடனும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
அதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, தாம் தொடர்ந்தும் சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.