மேலும்

செய்மதிப் பயன்பாடு குறித்த உடன்பாட்டில் இந்தியாவுடன் கையெழுத்திடுகிறார் ரணில்

modi-ranilதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கான (சார்க்) செய்மதி தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன்  உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளார்.

சிறிலங்கா உள்ளிட்ட சார்க்  உறுப்பு நாடுகளின் தேவைக்கான செய்மதி ஒன்றை ஏவும் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்திருந்தார்.

காத்மண்டுவில் நடந்த 18ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு சிறிலங்கா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்திலேயே வரவேற்புத் தெரிவித்திருந்தன.

தற்போது சார்க் நாடுகளின் தேவைக்கான செய்மதியை கொடை அடிப்படையில் இந்தியா தயாரித்து, விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்தநிலையிலேயே, வரும் திங்கட்கிழமை புதுடெல்லி செல்லும் சிறிலங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த செய்மதியைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *