மேலும்

திணைக்கள அதிகாரிகளை அமைச்சர்கள் நியமிக்க முடியாது – மைத்திரி அதிரடி உத்தரவு

maithriஅரசாங்க நிறுவனங்களில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான முடிவுகள், குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்படும் என்றும், அமைச்சர்கள் தன்னிச்சையாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நண்பகல் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அதிகாரிகளை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் முன்மொழிய முடியும்.

ஆனால், நியமனங்கள் தொடர்பாக அமைக்கப்படவுள்ள குழுவே அதுபற்றிய இறுதி முடிவை எடுக்கும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்திய பின்னரே இந்தக் குழுவை நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *