புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்து
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றிரவு அதிபர் மாளிகையில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.
இதன்போது, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
இந்த இராப்போசன விருந்தில், மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வந்த மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களும், சிறிலங்கா அதிபருடன் கலகலப்பாக உரையாடியதை அவதானிக்க முடிந்தது.
இந்த இராப்போசன நிகழ்வில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.