சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு
இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள கலதாரி விடுதியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில், நேற்று ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா கொழும்பு வந்துள்ளார்.
இந்தப் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பக்க நிகிழ்வாகவே, நேற்றைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹாவும் கலந்து கொண்டார்.
இதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.