மேலும்

மகிந்தவிடம் மண்டியிட்டார் மைத்திரி – வேட்பாளராக நிறுத்த இணக்கம்

maithripala-mahindaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை  சுசில் பிரேம் ஜெயந்த வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் சுசில் பிரேம் ஜெயந்த தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

UPFAstatementMR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *