மேலும்

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த – கருத்து வெளியிட மறுக்கிறது ஐ.நா

farhan haqசிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது குறித்து கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

நியுயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர், அதுபற்றித் தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *