கொழும்பிலுள்ள மனிதாபிமான விவகாரப் பணியகத்தை மூடுகிறது ஐ.நா
சிறிலங்காவில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம், இந்த ஆண்டு இறுதியில் மூடப்படவுள்ளது.
பாங்கொக்கில் உள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய தலைவர் ஒலிவர் லாசி- ஹோல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சில ஆசிய நாடுகளில் மனிதாபிமானப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஐ.நா முடிவெடுத்துள்ளதாகவும் இதன்படி, பபுவா நியூகினியாவில் உள்ள மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்புப் பணியகம் இந்த மாதம் மூடப்படவுள்ளதாகவும், சிறிலங்காவில் உள்ள பணியகம் இந்த ஆண்டு இறுதியில் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.