அஞ்சல் மூலம் வாக்களிக்க ஜூலை 14ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்ற அரச பணியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜூலை 14ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரச பணியாளர்கள் மற்றும், முப்படையினர், காவல்துறையினர் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும்.