மேலும்

தியத்தலாவ இராணுவ முகாமில் துப்பாக்கிகள் மாயம் – விசாரணைக்கு உத்தரவு

Diyathalawaதியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள் காணாமற்போயுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், இராணுவக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

22 மி.மீ துப்பாக்கி, கல்கட்டாஸ் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி ஆகியனவே காணாமற்போயுள்ளன.

கடந்த சனிக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையில் இவை காணாமற்போயுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *