மேலும்

அமெரிக்க கடற்படையுடனான போர்ப்பயிற்சியில் சிறிலங்கா கடற்படைப்படகு கவிழ்ந்தது

அமெரிக்க கடற்படையினருடன் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று, திருகோணமலைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் பலியானார்.

திருகோணமலைக் கரைக்கு அப்பால் 5 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, படகு ஒன்று கவிழ்த்தில், அதன் அடியில் சிக்கியே சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் பலியானார்.

அந்தப் படகில் இரண்டு அமெரிக்க கடற்படையினர் உள்ளிட்ட 8 பேர் இருந்ததாகவும், ஏனையோர் நீந்தி தப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைக்குக்கு இடையில், பிளாஸ் ஸ்ரைல் என்ற பெயரில் போர்ப்பயிற்சி இடம்பெற்று வருகிறது.

கடந்த 19ஆம் நாள் ஆரம்பித்த இந்தப் பயிற்சி, வரும் ஜூலை 2ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

எனினும், சிறிலங்கா கடற்படையினருடன் அமெரிக்க கடற்படையினர் நடத்தும் இந்தப் போர்ப் பயிற்சி பற்றிய தகவல்களை அமெரிக்கா இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *