சிறிலங்காவில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு
பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
கல்விச் சுற்றுலாவாக வந்துள்ள இந்தக் குழுவினர் இன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் குழுவினர் சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது.