ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் தம்மிக திசநாயக்கவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவை அம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில், சந்தித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அவரது அனுமதியைப் பெற்றிருந்தது.
இதையடுத்தே, இன்று பிற்பகல் நாடாளுமன்றச் செயலாளரிடம் இது கையளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.