பதவி விலகினார் திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண. ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது பதவியை விட்டு விலகியுள்ளார். அவரது பதவி விலகலை பாப்பரசர் பிரான்சிஸ், ஏற்றுக்கொண்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியதையடுத்து, வண.நொயல் இம்மானுவெல் கிறிஸ்ரியன், திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பாப்பரசரினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பதவி விலகியமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.