அழைப்பாணை விடுக்க முன்னர் அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் உத்தரவு
இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு, அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு முன்னதாக, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று, சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவி்ட்டுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய போதே சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சபையின் நடுவே அமர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.