மேலும்

Tag Archives: உயர்நீதிமன்றம்

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்- உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

“2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” அல்லது அதன் எந்தவொரு விதியும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாதாரண பெரும்பான்மை மூலம் நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யலாம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தில் அரசியலமைப்புக்கு முரணான எந்த விதிகளும் இல்லை என்றும், சாதாரண பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ரணிலின் அவசரகால பிரகடனம் சட்டவிரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022ஆம் ஆண்டு பதில் அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்க,  அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதன் மூலம் அவர் அடிப்படை  உரிமைகளை மீறியிருப்பதாகவும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட, சிறிலங்கா இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று, அறிவித்துள்ள சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், அவர் உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவும் பணித்துள்ளார்.

கோத்தாவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவை ஐதேக வெளியேற்றியது செல்லாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நீக்கப்பட்டது செல்லுபடியாகாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.