மேலும்

பீல்ட் மார்ஷலாக பதவிஉயர்த்தப்பட்டார் ஜெனரல் சரத் பொன்சேகா

Sarath-Fonsekaசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, வரும் 22ம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சிறிலங்காவிலேயே பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு பெறும் முதலாவது படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவேயாவார்.

இதனிடையே, தாம் விரைவில் பீல்ட் மார்ஷலாகப் பதவிஉயர்த்தப்படவுள்ளதை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர், இது தொடர்பான குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாட்களுக்குள், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் 22ம் நாள் ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படுவார் என்று செய்திகள் வெளியான போதிலும், சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அதனை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே, இந்தியாவின் சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் ஜெனரல் சரத் பொன்சேகா, சிறிலங்கா இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

“ஒட்டுமொத்த இராணுவமும் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனினும், எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

விசாரணைகள் ஒருபக்கமாக நடைபெறக்கூடாது. அவர்கள் எமது தரப்பின் கதைகளையும் கேட்கவேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *