ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க
இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க, நான்கு நட்சத்திர ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் இன்று அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அதையடுத்து, இராணுவத் தளபதி பதவியை முறைப்படி கையளிப்பதன் அடையாளமாக, இராணுவத் தளபதியின் வாள், புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம், ஜெனரல் தயா ரத்நாயக்கவினால் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர், இராணுவத் தலைமையகத்தில், அதிகாரிகளிடம் ஜெனரல் தயா ரத்நாயக்க விடைபெற்றுக் கொண்டார்.