இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் சுஸ்மா சுவராஜ்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த மாத இறுதியில், சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின், சிறிலங்கா பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் நாட்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பையேற்று, கொழும்பு வரவுள்ள சுஸ்மா சுவராஜ், இரண்டு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழு அமர்வில் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் அடுத்த மாதம், 13ம் நாள் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.
மேலும், சிறிலங்கா – இந்தியா இடையிலான பொருளாதார, அரசியல் கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்தப் பயணத்தின் போது பேச்சு நடத்தப்படவுள்ளது.