மேலும்

புதுடெல்லி சென்ற மைத்திரியை வரவேற்றார் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன்

MS-delhi (1)நான்கு நாள் பயணமாக இந்தியா சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை இன்று பிற்பகல் 5.08 மணியளவில் சென்றடைந்தது.

விமான நிலையத்தில், மைத்திரிபால சிறிசேனவை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

MS-delhi (1)

MS-delhi (2)

மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் சுதர்சன் செனிவிரத்ன உள்ளிட்டோரும், விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *