சுவிஸ் வங்கிகளில் 58.3 மில்லியன் டொலரைப் பதுக்கியுள்ள இலங்கையர்கள்
சுவிற்சர்லாந்து வங்கிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிறிலங்காவைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால், சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக சிறிலங்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால், 10.7 மில்லியன் டொலர் வைப்பில் இடப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 112வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.