மேலும்

மீண்டும் ஹியூகோ ஸ்வரை சந்தித்தார் மங்கள

Mangala-Swireபிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

லண்டனில் நடந்த இந்தச் சந்திப்பு நல்லதொரு சந்திப்பு என்றும், சிறிலங்காவில் தாம் நடத்திய பேச்சுக்களின் மீது அது நடத்தப்பட்டதாகவும், ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாத இறுதியில் கொழும்பு வந்திருந்த ஹியூகோ ஸ்வயர், சிறிலங்கா அதிபர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசதரப்பினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அத்துடன், வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனரையும் அவர் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mangala-Swire

நாளை மறுநாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர்  ஜோன் கெரியைச் சந்திக்கச் செல்லும் வழியில், பிரித்தானிய அரச உயர் மட்டத் தலைவர்களைச் சந்திப்பதற்காக மங்கள சமரவீர லண்டன் சென்றிருந்தார்.

எனினும், கடந்த மாத இறுதியில் கொழும்பில் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஹியூகோ ஸ்வயரை மட்டுமே அவர் இதுவரை சந்தித்துள்ளதாகத் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *