சீனாவுக்கு ஆப்புவைக்கும் ரணிலின் திட்டம்
அதிபர் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று சுற்றுலா கைத்தொழில்துறை தலைவர்களை சந்தித்துப் பேசிய அவர்,
“இந்த திட்டத்தினால், நீர்கொழும்பு தொடக்கம் பேருவளை வரையிலான கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும். எனவே, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் கைவிடப்படும்.
அத்துடன் மத்தளவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துல விமான நிலையத்தை பொருளாதார பயன்பாட்டுக்குரியதாக மாற்றப்படும்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத் திடலில், கடலுக்குள் 450 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கும், 1.4 பில்லியன் டொலர் செலவிலான இந்த திட்டத்தை சீனாவே பொறுப்பேற்றுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் நிலப்பரப்பில் பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.