மேலும்

நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமைச்சர் வாசு – மைத்திரியை ஆதரிப்பார்?

vasudeva-nanayakkaraஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஏற்கனவே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சில விடயங்களில் உடன்பாடு கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்பு திருத்தம் ஆகிய விடயங்களில் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டுக்கு, வாசு தேவ நாணயக்கார ஆதரவு வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை பிற்பகல் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *