எரிபொருள்களின் விலை திடீரென குறைப்பு – மகிந்தவின் அடுத்த தேர்தல் குண்டு
சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை, சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை 7 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக் குறைப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம், பெற்றோல் விலை 5 ரூபாவினாலும், டீசலின் விலை 3 ரூபாவினாலும், மண்ணெண்ணெயின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதுடன், மின்சாரக் கட்டணமும் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டது.
அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.