20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணைய காத்திருக்கின்றனராம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 15 தொடக்கம் 20 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எதிரணியுடன் இணையவுள்ளதாக, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, ஐதேகவில் இணைந்து கொண்டுள்ள அவர், இன்றுகாலை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள இன்னும் பலர் தன்னைத் தொடர்ந்து, எதிரணியுடன் இணைந்து கொள்ளக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.